Ticker

6/recent/ticker-posts

30 - 40 களில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்?

30 - 40 களில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்?


தக்காளி 

இவை கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்கிறது. இதனால் சருமம் தொய்வடையாமல் இருக்கும்.


பெர்ரி பழ வகைகள் 

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி போன்ற சிட்ரஸ் பழங்களான இவை சுருக்கங்களை வர விடாமல் தடுக்கும்


யோகார்ட் 

யோகார்டில் நீர்சத்து அதிகம் இருப்பதால், சருமத்திலுள்ள வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை தக்க வைக்கும். சுருக்கங்கள் எட்டிப்பார்க்காது.


நட்ஸ் வகைகள் 


பாதாம், முந்திரி வால் நட் ஆகியவற்றில் இல்லாத சத்துக்கள் இல்லை இதிலுள்ள ஒமேகா 2 கொழுப்பு அமிலங்கள் இளமையின் உபகரணமாகும்.


தேன் 

தினமும் இரவில் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடியுங்கள்.ஒரே மாதத்தில் முகம் புது பொலிவு பெறும். கொழுப்புகள் தங்க விடாமல், இளமையான தோற்றம் கிடைக்க தேன் அன்றாடம் சேர்த்து கொள்ளுங்கள்.


சத்தமே இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் விஷயங்கள்

வறுத்த உணவுகள் வறுப்பதற்குப் பதிலாக, உங்கள் உணவை வேகவைத்து உண்ணுங்கள்.


பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது.


அதிகப்படியான ஆல்கஹால்

அதிக மது அருந்துதல் உங்கள்

இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.


ஆளி விதைகள்

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் 6,400 மில்லி கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முடியை வலுப்படுத்தவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வழி செய்யும்.


நெல்லிக்கனி

நெல்லிக்கனியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.


கறிவேப்பிலை

இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ தலைமுடி நீளமாக வளர உதவும், கூந்தல் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும். ஒரு டம்ளர் காய்கறி சாற்றில் 10-15 கறிவேப்பிலைகளையும் சேர்த்து பருகி வரலாம். அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.


அஸ்வகந்தா!

அமுக்குரா என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா ஒரு அற்புதமான மூலிகையாகும். எலும்புகளை வலுவூட்டுவது தொடங்கி ஆண்மைக் குறைவை சரிசெய்வது வரை, இது பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.


குழந்தைகளுக்கு...

தவறான உணவுப் பழக்கங்களால் எலும்புகள் வலுவற்று காணப்படும் தற்கால குழந்தைகளுக்கு அஸ்வகந்தா கிழங்கு தீர்வளிக்கிறது. இதை அவர்களுக்கு உணவில் அவசியம் சேர்த்துத் தர வேண்டும். வேர்க்கிழங்கு வகையைச் சேர்ந்த இந்த மூலிகையில் எலும்புகளுக்கு உறுதி தரும் கால்சியம், வைட்டமின் டி சத்துகள் நிரம்பியுள்ளன. மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. பொடி செய்த கிழங்கை, பாலில் சேர்த்து தினமும் பிள்ளைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களின் எலும்பு பலப்படும்.


40+ வயதினருக்கு...

நாற்பது வயதுக்கு மேல் எலும்பு பலவீனத்தால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்பட எலும்பு தொடர்பான நோய்கள் பலரைத் தாக்கும், அதில் இருந்தும் இது பாதுகாக்கிறது. நோய் வரும் முன் தவிர்க்க, தொடக்கத்தில் இருந்தே அமுக்குரா கிழங்கை உணவோடு எடுத்துக்கொள்வது நன்மை தரும். ஒரு லிட்டர் பால், அரை லிட்டர் நீர் சேர்த்து, இட்லிப் பானையில் ஊற்றி, அதில் ஒரு கிலோ வேர்க்கிழங்கை வைத்து வேக வைக்க வேண்டும். இதில் கிழங்கு மிக மென்மையாக மசிந்துவிடும். அதில் சிறிது ஏலக்காய், பனை வெல்லம் சேர்த்து அரைத்து தினமும் பாலில் கலந்து, பருகி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.


மன அழுத்தம் குறையும்

உடலில் சுரக்கும் மன அழுத்தத்துக்கு காரணமான ரசாயனங்களை கட்டுப்படுத்துவதன் மூலம், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து, அஸ்வகந்தா மனதை அமைதிப்படுத்துகிறது.


 இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.


இது உடல் தசைகளை வலுவாக்குகிறது என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது எலும்பு, தசைகள் இரண்டையும் வலுவாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த உடல் வலுவையும் அஸ்வகந்தா அதிகரிக்கிறது.


நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் கட்டளைகள்

                    காலையில் ஆசனம், மாலையில் உடற்பயற்சி, இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும் செய்ய வேண்டும் ஆசனப் பயிற்சி உடலின் உள் உறுப்புகளை நலம் பெறச் செய்யும் உடற் பயிற்சி புற உறுப்புகளை வலுபெற செய்யும் தியானம் உள்ளதை தூயைமையகவும் மனதை தெளிவாகவும் செய்யும்.


காலையில் இஞ்சி நண்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால், வாதம் ,பித்தம்,ஆகிய நோய்கள் இன்றி வாழலாம்.


காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும், இரவில் சீக்கிரம் உறங்குவதும் நோய் தீர்க்கும் அன்றாட நடை முறைகள் ஆகும்.


ஒரு நாளைக்கு இருவேளை உணவு உண்டால் போதும். நினைத்த பொழுது எல்லாம் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.


பசித்து உணவு உண்ணவேண்டும். சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பதும் நல்லது.



பொறுப்புத் துறப்பு : 

           மருத்துவ குறிப்புகள், ஆலோசனைகள் அனைத்தும் நிபுணர்களின் பரிந்துரைகள், ஆய்வு முடிவுகள் அடைப்படையிலேயே, முடிந்தவரையில் உண்மைத்தன்மைகள் சோதிக்கப்பட்ட பின்பே இங்கு அளிக்கப்படுகின்றன. எனினும், எந்த ஒரு மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.






Post a Comment

0 Comments