Ticker

6/recent/ticker-posts

What is Success

எது நிஜமான வெற்றி?

வெற்றி என்பது தொட்டுவிடும் தூரத்தில் தான் உள்ளது என்று சொல்வார்கள் ஆனால் அதை அனுபவித்து வெற்றி கண்டவர்களுக்கு மட்டுமே தெரியும். 


ஒரு அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.


முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் "இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்".


இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.


மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.


அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு. அவனிடம் கேட்டே விட்டனர்.


நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று, அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் "50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்" என்றான்.


இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார். "50 வருசம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே" என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். இடி இடித்தது... மழை பெய்ய ஆரம்பித்தது... நம்பிக்கை ஜெயித்து விட்டது.


"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்".
 


வெற்றி நிச்சயம் :

4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !


8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி!


12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !


18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !


22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !


25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !


30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக் கொள்ள முடியுமானால், அது வெற்றி !


35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !


45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்க வைக்க முடியுமானால், அது வெற்றி !


50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !


55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !


60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !


65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !


70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !


75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !


80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !


முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் முயற்சிக்க மறவாதே வெற்றி கிட்டும்.


Post a Comment

0 Comments