கணவன் மனைவி காதல்
" 70 வயசு பெரியவர் தன்னோட மனைவியை இன்னமும் ‘Darling’. ‘Honey’. ‘Sweet heart’ன்னு கூப்ட்டுக்கிட்டிருந்தாரு.
அத பாத்து நான் அவரு கிட்ட கேட்டேன்….. “ஏங்கய்யா, எப்படி இந்த வயசுல கூட பொண்டாட்டிய இவ்வளவு பாசமா கூப்புடுறீங்க..??”
”தம்பி, அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு! அவ கிட்ட பேர கேக்க பயமா இருக்கு!”
பாராட்டி தள்ளுங்கள் :
சின்ன விஷயம் முதல் பெரிய விஷயம் வரை, அனைத்துக்கும் பாராட்டுங்கள். உங்கள் மனதில் சுமாரானது எனப்பட்டால் கூட பரவாயில்லை. பாராட்டித் தள்ளுங்கள். பாராட்டினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் பாராட்டுவதில் என்ன கஷ்டம். காசா, பணமா… பாராட்டுதானே அள்ளி விடலாம். இதனால் நிஜமாகவே உறவில் மேஜிக் நடக்கும்.
மனம் விட்டு பேசுதல்:
இருவருக்கும் மனம் விட்டு பேசுவது கட்டாயம். நிச்சயமான முதல், திருமணம் வரை இருவரும் அடிக்கடி வெகு நேரம் பேசுகின்றனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு பேசுவதை நிறுத்தி விடுகின்றனர். இதனால் இருவருக்கிடையே மனப்புரிதல் ஏற்படுவதில்லை. பிரச்சினையின் முதல் படியே, பேசாமல் இருப்பதால் தான். இருவரும் நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது மனம் விட்டு பேசுவது நல்லது.
கணவன், மனைவிக்காக ஒரு குட்டிக் கதை:
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார் சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.
அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க காலையில் குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து, சீருடை அணிவித்து, பள்ளிக்கு அனுப்புங்க அதோடு சமைப்பது, துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன் என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.
அவன் வீட்டில் இருக்க இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள் கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.
கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள் பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள் இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்! சொல்றதை கேட்க மாட்டேங்குது படின்னா படிக்க மாட்டேங்குது, சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது, அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன் பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே… என்று பாய…
அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா… என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள் உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா! என கணவன் திகைக்க…
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும் என்பதை அறிந்து கொண்டனர்.
திருச்செங்கோடு கோயில்:
அர்த்தநாரீஸ்வரராக சிவன், பார்வதி காட்சி அளிக்கும் திருச்செங்கோடு திருத்தலத்திற்குச் சென்று வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.
"கணவன் மனைவி நீயா..?
நானா..? என வாழ்க்கை
நடத்துவதை விட.., நீயும்
நானும் என்று வாழ்க்கை
நடத்தினால் இல்லறம்
சிறப்பாக இருக்கும்."
"மனைவியை தன் தாயாக
நினைத்துக் கொள்ளும்
ஆண்களும், தன் கணவனை
பிள்ளையாக நினைத்துக்
கொள்ளும் பெண்களும்
இருக்கும் வரை உண்மை
காதலுக்கு மரணமில்லை."
"எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும்
எனக்கு நீ.. உனக்கு நான்..
என்ற இந்த புனிதமான உறவு
மட்டும் போதுமானது."
"எந்த சூழ்நிலையிலும் எதையும்
எதிர்பார்க்காமல் அன்பு
செலுத்தும் உண்மையான
உறவு கணவன் மனைவி
உறவு மட்டும் தான்."
"என்னை கருவில் சுமந்த
தாயையும் என் கருவை
சுமக்கும் உன்னையும் நான்
கல்லறை செல்லும்
வரை நேசிப்பேன்".




0 Comments